திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற ஏப்ரல் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இன்று  மார்ச் 27ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 ரூபாய்க்கான இந்த தரிசன டிக்கெட் www.tirupathibalaji.ap.gov.inஎன்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. டிக்கெட் பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்து விடும் என்பதால் பக்தர்கள் முந்திக் கொள்ளுங்கள்.