பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை, பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே நின்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரி தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளது.

இதனால் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்க் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை பெரம்பூர் போலீசார் வலைவீடி வருகின்றனர்.