உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டம், பிரேம்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜேந்திர நகர் பகுதியில் சனிக்கிழமை அன்று நடந்த ஒரு விபத்து தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வீதியில் சைக்கிளில் சென்ற ஒரு சிறுமி மீது வெள்ளை நிற கார் மோதிய சிசிடிவி காட்சிகள் மக்கள் மனதில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.

சிசிடிவி வீடியோவில், சைக்கிளில் சென்ற சிறுமி மீது எதிர்பாராதவிதமாக வலது பக்கம் திரும்பிய கார் மோதியது. அதன் முன்பக்க சக்கரம் சிறுமி மீது ஏறி இறங்கியது. அந்தத் தாக்கத்தில் சிறுமி கீழே விழுந்து துடித்ததை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்தவுடன் உடனடியாக ஓடி வந்து உதவினர்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து பரேலி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். “விபத்து சம்பந்தமான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதன்படி விசாரணை நடக்கிறது.