மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தில் பெர்பாரா பகுதியில் பாபன் ஷேக் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக மது கதுன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இதில் பாபன் ஷேக் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தன்னுடைய மனைவியின் அழகை வர்ணிப்பார். குறிப்பாக தன் மனைவியின் மூக்கு அழகாக இருப்பதாக கூறும் அவர் ஒருநாள் அதை கடித்து சாப்பிட்டு விடுவேன் என்று அடிக்கடி கூறியுள்ளார்.

இந்நிலையில் சம்பவ நாளில் வழக்கம்போல் மது குடித்துவிட்டு வந்த பாபன் திடீரென அவருடைய மனைவியின் மூக்கை கடித்து மென்று சாப்பிட்டு விட்டார். வலியால் அலறி துணித்த கதுன் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் வீட்டை விட்டு ஓடினார். ஹாஸ்பிடலுக்கு சென்ற சிகிச்சை பெற்ற பிறகு தன் தாயாருடன் சேர்ந்து காவல் நிலையத்தில் கணவன் மீது புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாபன் ஷேக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.