
உத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு குளிப்பதற்காக ஆயுஷ் யாதவ் என்ற சிறுவன் சென்றுள்ளான். அங்கு நீச்சல் குளத்தில் குளிக்க 10 ரூபாய் கொடுக்காததால் குளத்தின் உரிமையாளரான தந்தையும் மகனும் சேர்ந்து சிறுவனை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிறுவனின் வாய் மற்றும் மூக்கில் மணல் அள்ளி போட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்துள்ள போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்