
இந்தியாவில் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நடப்பாண்டில் வருகிற 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை வருகிறது. இந்த ஹோலி பண்டிகையை வட மாநிலங்களில் சிறப்பாக மக்கள் வண்ணங்களை பூசி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். இதன் காரணமாக அங்கு விடுமுறை என்பது வழங்கப்படும்.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். அந்த மாநிலத்தின் சம்பல் பகுதியைச் சேர்ந்த காவல் அதிகாரி அனுஷ் சவுத்ரி ஹோலி பண்டிகை அன்று முஸ்லிம்கள் யாரும் மசூதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அன்றைய தினம் உங்கள் வீட்டில் வைத்தே தொழுகை செய்யுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.
அதாவது வருடம் தோறும் முஸ்லிம்கள் மசூதிக்கு சென்று தொழுகை செய்து வரும் நிலையில் வருடத்தில் ஒரு நாள் மட்டும் தான் ஹோலி பண்டிகையை இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். இதன் காரணமாக இஸ்லாமியர்கள் அன்றைய தினம் மசூதிக்கு செல்ல வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். இந்த உத்தரவுக்கு அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு கொடுத்துள்ளார். மேலும் அவர் சொன்னது சரிதான் முஸ்லிம்கள் அன்றைய தினம் வீட்டிலிருந்தே தொழுகை நடத்துங்கள் என்று அவரும் உத்தரவிட்டுள்ளார்.