பொதுவாகவே அனைவராலும் விரும்பப்படும் செல்லப் பிராணிகளில் ஒன்று நாய். இவை நமக்கு பிடித்த பிராணியாக இருந்தாலும் இவற்றிடம் காணப்படும் சில வினோத பழக்கங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அதன்படி நாய் அடிக்கடி செருப்பை கடித்து விளையாடுவதை பார்த்திருப்போம். நாய்கள் செய்யும் இந்த விஷயங்கள் நமக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தும். ஆனால் நாய்களின் இந்த செயலுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை பார்க்கலாம். பொதுவாகவே நாய்கள் மனிதர்களின் காலணிகளை கடிப்பதற்கும் ஆடைகளை கடித்து கிழிப்பதற்கும் காரணம் அது அந்த நபரை நேசிப்பது தான் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மேலும் குறிப்பிட்ட நறுமணம் பிடித்ததால் அதனை தக்க வைத்து கொள்வதற்காக நாய்கள் பிடித்தமானவர்களை பிரியும்போது ஏற்படும் வேதனையை தாங்கிக் கொள்ள முடியாமலும் இவ்வாறு செருப்பை கடிக்கின்றன. சில சமயத்தில் கடுமையான பசியின் வெளிப்பாடாகவும் நாய்கள் காலணிகளை கடிப்பதை பழக்கமாக வைத்துள்ளன. அது மட்டுமல்லாமல் நாய்கள் வயிற்றில் புழுக்கள் இருந்தாலும் அவை அடிக்கடி செருப்புகளை கடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும். ஆனால் நாய்க்குட்டிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது விளையாட்டுக்கானதாக இருக்கும்.