
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கொங்கராந்தல் கிராமத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஒரு தெரு நாய் சாலைகளில் சுற்றி திரிந்தது. அந்த நாயை வெங்கடேசன், சரத்குமார் ஆகிய இரண்டு பேரும் நாட்டு துப்பாக்கியால் சுட்டனர். அப்போது தவறுதலாக குண்டு பாய்ந்து சிறுவன் காயமடைந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வெங்கடேசன், சரத்குமார் ஆகிய இருவரையும் மூன்று பிரிவுகளின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.