
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அஞ்சலி. இவருக்கு தற்போது 37 வயது ஆகும் நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் நடிகை அஞ்சலி ஏற்கனவே ரகசிய திருமணம் செய்து கொண்டதாக அடிக்கடி இணையதளங்களில் தகவல்கள் பரவுவது வழக்கம். ஆனால் வதந்திகளை அஞ்சலி மறுத்துள்ளார். இந்நிலையில் நடிகை அஞ்சலி திருமணம் குறித்து பேசியது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது, எனக்கு ஏற்கனவே 4 திருமணங்கள் செய்து வைத்து விட்டார்கள்.
முதலில் இது போன்ற திருமண வதந்திகள் வரும்போது வீட்டில் அனைவரும் கவலைப்பட்டனர். அப்போது அது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது இது பற்றிய செய்திகளை எல்லாம் கண்டுகொள்வதில்லை. என்னுடைய திருமணம் குறித்து இப்படி வதந்திகள் பரவுவதால் நான் ஒரு பையனை என் வீட்டிற்கு அழைத்து சென்று இவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினால் கூட என் வீட்டில் இருப்பவர்கள் நம்ப மாட்டார்கள். நான் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். ஆனால் அதற்கு நிறைய காலம் இருக்கிறது. நான் தற்போது சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார்.