
தமிழ் சினிமாவில் 80களில் தன்னுடைய காந்த கண்களால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டவர் தான் சில்க் ஸ்மிதா. குணச்சித்திர நடிகையாக இருந்த போதிலும் இவரை திரை உலகமே கவர்ச்சி பொருளாக தான் பயன்படுத்திக் கொண்டது. அன்றைய காலகட்டத்தில் இவரின் நடனமிடம் பெறாத ஒரு படத்தைக் கூட பார்க்க முடியாது. புகழின் உச்சத்தில் இருந்த இவரின் வாழ்க்கையில் ஏமாற்றங்கள் மற்றும் வலிகள் மட்டுமே அவருக்கு துணையாக இருந்தன. மன அழுத்தம் மற்றும் தனிமை என அவரின் வாழ்க்கை பலருக்கும் பேசு பொருளாக மாறியது.
1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சில்க் ஸ்மிதா பற்றி கூறும்போது அவரின் இறுதி சடங்குக்கு திரையுலகை சேர்ந்த ஒரே ஒரு நடிகர் வந்தார் என்றால் அது அர்ஜுனாக மட்டும் தான் இருக்க முடியும். மேலும் ஒரு நாள் சில்க் ஸ்மிதா அர்ஜுனிடம் நான் இறந்து போனால் என் சாவுக்கு நீ வருவியா என்பது போல கேட்டுள்ளார். உடனே அர்ஜூன் என்ன பேச்சு இதெல்லாம் இன்று கூறிவிட்டு அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன் பிறகு சில நாட்கள் கழித்து சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அர்ஜுனை மிகவும் வேதனை அடைய செய்ததாக மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.