சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்கள் பரவி வருகின்றன. தற்போது வைரலாகி வரும் ஒரு சுவாரஸ்யமான வீடியோவில், தனது வேலையை நினைத்து அமைதியாக சாலையில் நடந்து சென்ற ஒரு நபர், திடீரென ஒரு ஆட்டின் தாக்குதலால் கீழே விழும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த நபர் யாரையும் எதற்கும் குறை கூறாமல், சிந்தனையில் மூழ்கியபடியே சென்று கொண்டிருந்தார். ஆனால் சாலையின் ஓரத்தில் கட்டி வைத்திருந்த ஒரு ஆடு, எதிர்பாராத விதத்தில் பாய்ந்து தாக்கியதால் அவர் தரையில் விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோ @gharkekalesh என்ற X (முன்னாகணக்கிலிருந்து பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவை 7,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். வீடியோவில் அந்த நபர் ஆட்டின் கட்டுப்பாட்டு வரம்பிற்குள் சென்றதும், ஆடு திடீரென பாய்ந்தது. ஆடு  தாக்கிய விதம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் அந்த நபருக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும், பார்வையாளர்களுக்கு சிரிப்பூட்டும் நிமிடங்களாக இருக்கின்றன.

 

வீடியோவைப் பார்த்த பின் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். “தாக்குதல் திடீரென நடந்தது” என்று ஒருவர் பதிவிட்டதோடு, மற்றொருவர் “நடந்து செல்லும் போதே தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்தது போல உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “இது பழைய பகை போல் தெரிகிறது” என்றாலும், “ஆடு அவரை குறிவைத்தது போல இருந்தது” என நகைச்சுவையாக சிலர் பதிவு செய்துள்ளனர். மேலும்  இந்த வீடியோ, ஒரு சாதாரண நாளில் ஒரு திடீர் நிகழ்வு எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதை சுட்டிக்காட்டுகிறது.