
பாகிஸ்தானில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு கடையில் இரண்டு பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கடை மூடப்பட்டிருந்த நிலையில் திடீரென கதவை திறந்து கொண்டு ஒரு காளைமாடு வந்த நிலையில் அவர்கள் இருவரையும் முட்டி தூக்கி வீசியது. அவர்கள் இருவரும் எப்படியோ அந்த மாட்டிடமிருந்து தப்பித்து வெளியே ஓடிவிட்டனர்.
பின்னர் அந்த மாட்டை கடையிலிருந்து வெளியே வரவழைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் அந்த மாடு ஆடாமல் அசையாமல் கடைக்குள் இருந்தது. பின்னர் ஒரு கயிறை வெளியிலிருந்து மாட்டின் கொம்பின் மீது வீசி அதனை வெளியே இழுத்துக் கொண்டு சென்றனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Bull attacks shopkeepers Somewhere in Pakistan
pic.twitter.com/kFRWnREtNb— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 8, 2025