
மதுரையில் கடந்த 14ஆம் தேதி அன்று நாதக நிர்வாகி பாலமுருகன் அதிகாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. பாலமுருகன் கொலை வழக்கில் கைதானவர்கள் நான்கு பேரில் போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்ற மூன்று பேருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தற்போது இந்த மூன்று பேரும் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் . அவர்கள் கால் கட்டோடு சிகிச்சை பெற்று வரும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.