
நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக நிர்வாகிகள் பலர் விலகி வருகிறார்கள். மாவட்ட செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் என கூண்டோடு கட்சியிலிருந்து விலகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் சீமான் நடிகர் ரஜினிகாந்தை சென்று சந்தித்தார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறிய போது அவரை கடுமையாக விமர்சித்த சீமான் திடீரென அவரை நேரில் சென்று சந்தித்தது பேசும் பொருளாக மாறியது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மூத்த தொண்டர் ஒருவர் தற்போது அந்த கட்சியிலிருந்து விலகுவதற்கான ஒரு அதிர்ச்சி காரணத்தை தெரிவித்துள்ளார்.
அதாவது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது நடிகர் விஜய் வீடு வீடாக சென்று உதவி செய்தார். அப்படிப்பட்ட விஜயை லாரியில் அடிபட்டு செத்துவிடுவார் என்று சீமான் கூறுகிறார். ஆனால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் விஷக்கிருமிகள் நுழைந்துவிட்டதாகவும் தீவிரவாதிகள் நுழைந்துவிட்டதாகவும் கூறினார். அவர் கூறியது அனைவருக்குமே தெரிந்தது. வேண்டுமென்றால் எடுத்துப் பாருங்கள். அப்படிப்பட்ட ரஜினிகாந்தை நேரில் சென்று சீமான் சந்தித்துள்ளார். மேலும் இதன் காரணமாக தான் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அந்த மூத்த நிர்வாகி கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.
!!இதுதான் காலம் செய்கின்ற கோலம்!!
!! என்ன சொல்ல போறீங்க Mr சீமான்!!..
“தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழிந்த போராளிகளுக்கு ஆதரவு அளித்த விஜயை நீங்கள் அவமதிக்கீறீர்கள்”
“மூத்த தொண்டர் #NTK கட்சியில் இருந்து விலகுவதற்கு இதுவே காரணம்”#TVK #TVKVIJAY #VIJAY #Thalapathy69 pic.twitter.com/DkW4a0Im11
— RAJALAKSHMI TVK வடசென்னை (@Rajalakash49157) November 30, 2024