குஜராத்தில் இருந்து சில நிமிடங்களுக்கு முன்பாக லண்டனுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் திடீரென விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் கரும்புகை சூழ்ந்துள்ள நிலையில் அங்கு உடனடியாக தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்துள்ளனர்.

 

மேலும் இந்த விமானத்தில் 242 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. மேலும் சம்பவ இடத்தில் தற்போது மீட்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில் உயிரிழப்புகள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.