பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலத்தைச் சேர்ந்த மத போதகர் ஒருவர் வெளியிட்ட அதிரடி வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவி வருகிறது. அதில், “இந்தியா பாகிஸ்தானைத் தாக்கினால், நாங்கள் பஷ்டூன்கள் பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராக இந்திய இராணுவத்தை ஆதரிப்போம்,” என்று கூறும் காட்சி வைரலாகியுள்ளது.

பாகிஸ்தான் இராணுவம் பஷ்டூன் மக்களின் மீது நடத்திய கடுமையான நடவடிக்கைகள், காணாமல் போனோர் விவகாரம், பொருளாதார புறக்கணிப்பு ஆகியவை குறித்து அந்த மதபோதகர் தனது கருத்தை தெரிவிக்கிறார். “பாகிஸ்தானால் எங்களுக்குச் செய்யப்பட்ட அட்டூழியங்களை நீங்கள் அறியவில்லையா? பாகிஸ்தானுக்கு ஜிந்தாபாத் என்று எங்களால் சொல்ல முடியாது,” என அவர் கூட்டத்தில் பேசும் காட்சியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

 

இந்த வீடியோ பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு வெளியாகி உள்ளது. இதனால் இந்தியா–பாகிஸ்தான் இடையேயான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்குள் உள்ள பஷ்டூன் மக்களிடையே நம்பிக்கைக் குறைவு அதிகரித்து வருவதை இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது. பஷ்டூன் தஹாபுஸ் இயக்கம் (PTM) உள்ளிட்ட பல இயக்கங்கள், பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.