தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விகாரபாத் பகுதியில் ஒரு சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. பரிகி என்ற பகுதியில் நடந்த இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவில் நடந்த இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் படுகாயம் அடைந்த 17 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.