பீகார் மாநிலத்தின் தர்பங்கா ரயில்வே நிலையத்தில்,  ரயில்வே அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், சுதந்திரா சேனானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ஆர்.பி.எஃப் மற்றும் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளி மதுபனி மாவட்டத்தைச் சேர்ந்த துர்கா காந்த் சவுத்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தன்னை ரயில்வே அதிகாரி என பொய் கூறி ரயிலில் பயணம் செய்துள்ளார்.

சம்பவம் வியாழக்கிழமை 12562 சுதந்திரா சேனானி எக்ஸ்பிரஸ் ரயிலின் H1 பெட்டியில் நடைபெற்றது. ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு, ரயிலில் ஒருவர் அதிகாரியாக நடித்து பயணித்து வருவதாக தகவல் வந்தது.

அதிகாரிகளிடம் தவறான தகவல்களை கூறி மிரட்டிய அந்த நபர், தீவிர விசாரணைக்குப் பிறகு அதிகாரி இல்லை என்றும், தனது உண்மையான பெயர் துர்கா காந்த் சவுத்ரி என்றும் தெரிவித்தார். இவர் மதுபனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் உறுதி செய்யப்பட்டது. மேலும், அவரிடம் சட்டபூர்வமான எந்த அடையாள ஆவணமும் இல்லாததும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக CTETI அமைப்பின் சண்டேஷ்வர் ராய் என்பவர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், RPF காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக சமஸ்திபூர் ரயில்வே நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட உள்ளது.