
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் மார்ச் 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடந்த திடீர் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பஞ்சாரா ஹில்ஸ் சாலை எண் 12-இல் உள்ள ஓமேகா மருத்துவமனையின் அருகே காஜா என்ற நபர், தனது வாகனத்தில் தொலிசொக்கியில் இருந்து பஞ்சாரா ஹில்ஸுக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு கார் மீது மோதியுள்ளார். இதனால் காரின் ஓட்டுநருடன் காஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தகராறு முற்றிய நிலையில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை விலக்கி விட்டனர். அப்போது கோபமடைந்த காஜா போலீஸ்காரர் ஸ்ரீகாந்தை பீர் பாட்டிலால் தலையில் அடித்தார். பின்னர் சக போலீசார் அந்த இடத்திற்கு சென்று காஜாவை பிடித்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
A police constable was attacked by a man with beer bottle in Hyderabad’s Banjara Hills on Tuesday, March 25.
The incident occurred near Omega Hospital on Banjara Hills road number 12.#Hyderabad #Telangana pic.twitter.com/q9sRPNqJXP
— The Siasat Daily (@TheSiasatDaily) March 25, 2025