கேரள மாநிலத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார். இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப், பல்சர் சுனில் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக 39 சாட்சிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு முதல் கட்டமாக 27 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதில் 12 பேரிடம் விசாரணை நடத்தப்படாமல் இருந்த நிலையில், 2-ம் கட்ட விசாரணைக்கு 20 பேரின் பட்டியல் தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதில் மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் பிரபல நடிகையுமான மஞ்சுவாரியரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. நடிகை மஞ்சுவாரியர் உட்பட 20 பேருக்கு குறுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நடிகை மஞ்சு வாரியர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.