லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் இன்று ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார். அதில், போதைப்பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பாடல் காட்சிகள் அமைந்துள்ளது.

மேலும், போதைப்பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் பாடல் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.