கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் தன் தந்தை குடியிருந்த வீட்டை புதுப்பித்து வரும் நடிகர் பாபி சிம்ஹா, கட்டுமான பணிகளுக்காக ஜமீர் என்ற பொறியாளரிடம் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், வாங்கிய பணத்திற்கு உரிய கட்டுமானத்தை மேற்கொள்ளாமல் ஜமீர் தன்னை ஏமாற்றிவிட்டதாக பாபி சிம்ஹா புகார் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சமூக ஆர்வலர் என்ற போர்வையில் மகேந்திரன் என்பவர் என்னை மிரட்டுகிறார். நடிகரான எனக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாகும்? இந்த பிரச்னையை தீர்க்க தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.