டெல்லியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். அந்த பெண்ணின் கணவர் வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்த போது தனது மனைவி வேறு ஒரு ஆணுடன் உடலுறவு கொண்டிருப்பதை நேரில் பார்த்தார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கணவர் தனது மனைவியின் கள்ளக்காதலனை கொடூரமாக சித்தரவதை செய்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த நபர் 21 வயதுடைய ரித்திக் வர்மா என்பது தெரியவந்தது. ரித்திக் வர்மாவின் நகங்கள் பிடுங்கப்பட்டு உடல் முழுவதும் காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ரித்திகை ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தாக்கியதாகவும் தெரிகிறது. டெம்போ ஓட்டுநரான ரித்திக் பெற்றோருக்கு ஒரே மகன். கள்ளக்காதலால் அவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.