
கனடாவை சேர்ந்த Giovanna Ippolito என்ற பெண் ஒருவர் தோல் மற்றும் கால் வலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த வலியை தாங்க முடியாது அவர் மருத்துவமனைக்குச் சென்று எக்ஸ்ரே எடுத்துள்ளார். அப்போது அவரது முதுகெலும்புக்குள் உடைந்த ஒரு ஊசியின் ஒரு பெரிய துண்டு இருப்பதை எக்ஸ்ரேவில் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அந்த ஊசியுடன் அவர் பல வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார். மயக்க மருந்து நிபுணர் முன்னர் செய்த தவறால் அந்தப் பெண் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க அவரிடம் எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில் தொடர்ந்து அவர் சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.