
உதகை மாவட்டம் அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனையானது இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக அம்மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது. அதாவது நுழைவுக் கட்டண மையத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், அதற்காக இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஊட்டிக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் கவலை அடைந்துள்ளார்கள். கட்டுமான பணிகள் முடிவடைந்த பிறகு, காட்சி முனை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.