கரூர் மாவட்டம் புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் தென்னரசு(16).இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 27-ஆம் தேதி தென்னரசு பொதுத்தேர்வு எழுதிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் இருந்த புளியமரம் முறிந்து தென்னரசு மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த மாணவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தென்னரசு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.