நான்கு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கானா மாநிலம் கொடங்கல் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட 32,800 வாக்குகளை அதிகம் பெற்று அவர் வெற்றிவாகை சூடியதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து காமா ரெட்டி தொகுதியில் முதல்வர் கே சி ஆர் ஐ எதிர்த்துப் போட்டியிட்ட ரேவந்த் அங்கு முன்னிலை பகிப்பது குறிப்பிடத்தக்கது.