
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வருகிற 29-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி சென்று, அங்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியோ டைடல் பார்கை திறந்து வைக்கிறார். இதனையடுத்து 30-ம் தேதி காலை தூத்துக்குடியில் புதுமை பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார்.
அதனை தொடர்ந்து அங்கிருந்து கன்னியாகுமரி செல்லும் முதலமைச்சர், விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் ₹37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார். வருகிற 31ம் தேதி காலை திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்ததை ஒட்டி, கன்னியாகுமரியில் நடைபெறும் வெள்ளி விழாவில் பங்கேற்கிறார்.