தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குல்லா தாண்டா பகுதியில் பிரகலாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சங்காபாய் (36) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் இரு மகள்களும் இருந்துள்ளனர்.

இவர்களுடைய இளைய மகள் வாணிஸ்ரீ-க்கு 12 வயது ஆகும் நிலையில் மூத்த மகள் ஹைதராபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இதில் பிரகலாதன் நேற்று முன்தினம் ஹைதராபாத் சென்று விட்டார்.

இந்நிலையில் சங்காபாய் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் ஏர் கூலரை ஆன் செய்துவிட்டு தூங்கினார். அப்போது ஸ்ரீவாணி ஏர்கூலர் மீது கால் வைத்துள்ளார். தூக்கத்தில் தெரியாமல் கால் வைத்த நிலையில் திடீரென மின்சாரம் பாய்ந்தது. ஸ்ரீவாணி தன் தாயின் மீது கை போட்டு தூங்கிய நிலையில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அதிகாலை மகன் எழுந்து பார்த்தபோது தன்னுடைய தாயும் சகோதரியும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.