தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் அரசு சேவை இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. இங்க தங்கியிருந்து மாணவிகள் பலர் கல்வி பயின்று வருகின்றனர். அந்த வகையில் சென்னை தாம்பரத்திலும் ஒரு அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது.

இங்கு தங்கியிருந்து ஒரு மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த காவலாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து காவலாளியை போலீசார் கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.