திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே பாலசுப்ரமணியன் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி முத்துலட்சுமி (34) என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பாக தன் கணவருடன் தகராறு செய்துவிட்டு முத்துலட்சுமி தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இது தொடர்பாக நெல்லை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பாக முத்துலட்சுமி தன் கணவன் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை பாலசுப்பிரமணியன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தண்ணீரை ஊற்றி அவரை முத்துலட்சுமி எழுப்பிய நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக கோபத்தில் முத்துலட்சுமி கொதிக்கும் எண்ணையை தன் கணவரின் வேட்டியை அவிழ்த்து வயிற்றுப் பகுதிக்கு கீழ் ஊற்றியுள்ளார். இதில் வயிற்று பகுதியில் இருந்து கால்வரை அவரது உடல் வெந்த நிலையில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. இது தொடர்பாக சிவந்திபட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் பாலசுப்பிரமணியனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக முத்துலட்சுமிக்கு சந்தேகம் வந்ததால் பிரச்சனைக்கு முதல் காரணமாக அமைந்தது என்பது தெரிய வந்தது. தற்போது முத்துலட்சுமியை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..