
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி மணிமாலா. 38 வயதான இவர் அரசு மருத்துவமனையில் தோல் நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் மணிமாலா நேற்று காலை வீட்டின் அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, மணிமாலாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.