நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் தூத்துக்குடியில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக பல்வேறு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நவம்பர் 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் 12.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.