
மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சிலர் நேற்று ஒரு திருமணத்திற்காக ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். திருமணத்தை முடித்துவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பும்போது ஜபுவா மாவட்டம் அருகே வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வேனின் மீது மோதியது. இந்த விபத்தில் வேனில் வந்த ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் இருந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து லாரி மோதி வேன் நசுங்கியதால் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க நீண்ட நேரம் ஆகியது.
பின்பு உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.