
இன்றைய காலகட்டத்தில் திருமணம் நடக்கும் மணமக்களை போட்டோ எடுப்பதற்காக விதவிதமான முயற்சியில் ஈடுபடுகின்றனர். அதில் ஒன்று ஃபோட்டோ எடுக்கும் போது புகை வருவது போல காட்டுவது.
மத்திய பிரதேச மாநிலம் ராஸ்கல் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் வரும் போது புகை வருவது போல எபெக்டை உருவாக்கியுள்ளனர்.
அப்போது குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்கு வந்த 7 வயது சிறுமி வாஹினி என்பவர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வாஹினியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நிலைமை மோசமாக இருப்பதால் இந்தூருக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். பின்னர் வெண்டிலேட்டர் உதவியுடன் இந்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சோகமான தருணத்திலும் சிறுமியின் பெற்றோர் தங்களது மகளின் கண்களை தானமாக கொடுக்க முடிவு செய்தனர். இது குறித்து சிறுமியின் தந்தை கூறும் போது, எங்கள் மகள் இப்போது இல்லை என்றாலும் அவளுடைய கண்கள் வேறு ஒருவருக்கு பார்வை தரும் என்பதை எண்ணும் போது மனதுக்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது என கூறியுள்ளார்.