தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக திமுக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. மக்களுக்கு பலன் தரும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கு வழங்கப்படும் உதவித்தொகை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மணமகன்/மணமகள் ஆடை, அரை சவரன் தங்கம், 20 பேருக்கு உணவு, மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், கைக்கடிகாரம், மிக்ஸி, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் அனைத்தும் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.