உத்தரபிரதேச மாநிலம் சந்த் கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள தன்காட்டா காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண், குடும்பத்தின் வற்புறுத்தலால் ஜூன் 10ஆம் தேதி ஒரு கிராமத்து இளைஞரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் தனது பழைய காதலனுடன் வீட்டைவிட்டு ஓடி விட்டார். அந்தப் பெண்ணின் காதலன் அதே கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் காதலில் இருந்தனர் என்றும்  கூறப்படுகிறது.

இவர்களை தேடிய பெண்ணின் சகோதரர், கோரக்பூரில் இருவரையும் கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இருவரையும் சஹஜன்வா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், பெண் தனது கணவருடன் அல்ல, தனது காதலனுடன் வாழ விரும்புவதாகத் தெரிவித்தார். இதையடுத்து, இருவருக்கும் போலீசார் ஆலோசனை வழங்கியதுடன், அவர்கள் இருவரும் மேஜர் என்பதால், அவர்களை விடுவித்தனர்.

இது தொடர்பாக, சஹஜன்வா காவல் நிலைய அதிகாரி மகேஷ் சௌபே கூறுகையில், “இது ஒரு குடும்ப பிரச்சனை. இருவரும் வயது வந்தவர்கள் என்பதால் சட்டப்படி தலையிட முடியாது. அவர்களின் விருப்பப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார். மேலும் இந்த சம்பவம், இளம் காதலர்கள் எதிர்கொள்ளும் குடும்ப அழுத்தம் மற்றும் திருமணத்தின் பின்னணி குறித்து சமூகத்தில் சிந்திக்க வைக்கும் விதமாக உள்ளது.