
கேரள மாநிலம் கோட்டாரக்கரா நெல்லிக்குனத்தைச் சேர்ந்த ரிஜோ என்ற நபர், திருமணமான ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததோடு, அவளது நிர்வாண புகைப்படங்களை வைத்திருப்பதாக மிரட்டி வந்த புகாரில், எழுகோன் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். குற்றவாளியான ரிஜோ, வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக இந்தியாவிற்கு திரும்பியவுடன், நெடும்பாசேரி விமான நிலையத்தில் போலீசாரிடம் பிடிபட்டார். இதற்காக, முன்பே எழுகோன் போலீசார் அவரைத் தேடி அந்த நிலையில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.
அதாவது ரிஜோ கடந்த காலத்தில், திருமணம் செய்ய முடிவு செய்து அந்தப் பெண்ணை சந்தித்திருந்தார். ஆனால், அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண் வேறொருவரை திருமணம் செய்த பிறகும், ரிஜோ அவரை தொடர்ந்து துரத்தி, வீட்டுக்கு சென்று மிரட்டி வந்துள்ளார்.
பின்னர் வெளிநாட்டில் வேலைக்காக சென்ற அவர், அங்கிருந்து அந்தப் பெண்மணியின் கணவருக்கு தொலைபேசி செய்து, உன்னுடைய மனைவியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாகவும், உன் மனைவியுடன் நான் உறவில் இருந்ததேன் இருந்தேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த அச்சுறுத்தல்களை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தம்பதி கடந்த நவம்பரில் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரிஜோவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினர்.
தற்போது அவர் நெடும்பாசேரி விமான நிலையத்தில் கைதாகி, எழுகோன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரிஜோ, காவலில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.