
திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு நினைவாகவே பதிகின்றன. ஆனால், சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் நடந்த விசித்திரமான சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. பூசாரி திருமண சடங்குகளில் ஈடுபட்டிருந்த நேரத்தில், திடீரென ஒரு புறா பறந்து வந்து மணமகளின் தலையில் அமர்ந்தது. இதைக் கண்ட மணமகள் முதலில் அதிர்ச்சியடைந்தாலும், பிறகு சிரிக்க ஆரம்பித்தார். இந்த அபூர்வமான தருணம் வீடியோக்காட்சியாக பதிவு செய்யப்பட்டு, இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவைக் ‘ட்ரெண்டி லட்கா’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் மே 12 ஆம் தேதி பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ 10.9 மில்லியன் பார்வைகளையும், 8.99 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. வீடியோவில், மணமகன் ஷெர்வானி அணிந்தும், மணமகள் சிவப்பு நிற சேலையில் அழகாகவும் தோன்றுகிறார். ஏழு ஜென்ம சபதம் எடுக்கும் தருணத்தில் நடந்த இந்த சம்பவம், மண்டபத்தையே சிரிப்பாக மாற்றியது. புறா மீண்டும் ஒரு முறை மணமகளின் தலையில் அமர்ந்ததையும் வீடியோவில் காணலாம்.
View this post on Instagram
இந்த வீடியோவுக்குக் கிடைத்த விருப்பங்களைவிட, அதற்குத் தந்துக் கொள்ளப்பட்ட கருத்துகள் மேலும் வைரலாக்குகின்றன. “அவள் பாக்கியவதி”, “இயற்கையே இந்த ஜோடியை ஒன்றாக வைத்திருக்க விரும்புகிறது”, “புறா கடவுளின் வடிவமாக ஆசீர்வதிக்க வந்தது” எனப் பலரும் எழுதியுள்ளனர். மேலும் ஒருபக்கம் திருமண நிகழ்ச்சி, மறுபக்கம் இயற்கையின் சிறப்பான நடத்தை என, இந்த தருணம் நெஞ்சை வருடும் விதமாக சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை பெற்றுள்ளது.