ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலின் விஐபி தரிசன டிக்கெட் களை இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர் சந்திரசேகர் வாங்கியுள்ளார். இதனை ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்களின் சிபாரிசு கடிதங்கள் மூலம் செய்துள்ளார். இந்த விஐபி டிக்கெட்டுகளை ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு பக்தர்களுக்கு விற்பனையும் செய்துள்ளார். இந்த டிக்கெட்டுகளின் விலை ரூ.20,000 முதல் ரூ.50000 வரை விற்பனை செய்து உள்ளார்.

இந்த நிலையில் சந்திரசேகரின் இந்த மோசடியை பெங்களூருவை சேர்ந்த ஜெகதீஷ் மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் துறைக்கு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தேவஸ்தானம் பாதுகாப்பு படை வீரர் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளது. இது குறித்து திருப்பதி காவல்துறையினர் சந்திரசேகர் இடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு படை வீரரின் இந்த மோசடி செயல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.