பிரணவ் ஜூவல்லரியில் 11.60 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. திருச்சியை சேர்ந்த பிரணவ் ஜூவல்லரியில் அமலாக்கத்துறை கடந்த 20ஆம் தேதி சோதனை நடத்தியது. பிரணவ் ஜூவல்லரிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள், 11.60 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரணவ் ஜுவல்லர்ஸ் கடைகளில் நடந்த சோதனையில் 23.70 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.