நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார், அவர் கூறியதாவது, தமிழகம் முழுவதும் வீட்டுமனை பட்டாக்கள் வழங்க கோரி புறப்பட்ட மனுக்களை ஏற்று தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பட்டாக்கள் வழங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தற்போது அதன் அடிப்படையில் தமிழக முழுவதும் 56 ஆயிரம் இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பட்டா கோரி புறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து எங்களோடு இணைய பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை பாஜகவினரால் தங்களது கூட்டணியை இறுதி படுத்த இயலவில்லை.

எங்கள் கூட்டணியில் இருந்து கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியில் வேல்முருகன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவரது எண்ணம் எப்போதும் நிறைவேறாது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் தொகுதிகள் கேட்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பார்த்துக் கொள்வார். அதில் நான் கருத்து சொல்ல முடியாது எனக் கூறியுள்ளார்.