திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு தனி தொகுதிகள் மற்றும் ஒரு பொது தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்ததாகவும், மூன்றாவது தொகுதி வேண்டுமென்றால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக நிபந்தனை விதித்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து நாளை மறுநாள் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திமுக இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.