அரசு ஊழியர்களை தமிழக அரசு வஞ்சித்து வருவதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வருவதற்கு அரசு ஊழியர்களின் வாக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால் அந்த திமுக அரசு, அரசு  ஊழியர்களை  நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.

சாலைகளில் போராடியும் அவர்களுக்கான நீதியை அரசு வழங்கவில்லை எனக் கூறியுள்ளார். மேலும்  பஞ்சு மிட்டாயில் காட்டும் அக்கறையை டாஸ்மாக்கை மூடுவதில் திமுக காட்டவில்லை என விமர்சித்தார்.