கர்நாடக மாநிலம் மகாதேஸ்வரன் மலை புலிகள் காப்பகத்தில் தாய் புலி மற்றும் 4 குட்டி புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் 5 புலிகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது உறுதியானது.

கல்லேப்போட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவன்னா உள்பட ஆறு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த புலிகளுக்கு அருகே பசுவின் சடலம் கிடந்தது. அதை அதிகாரிகள் பரிசோதனை செய்து பார்த்தபோது பசுவின் உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது.

அந்த பசு சிவன்னாவிற்கு சொந்தமானது. தனது பசுவை கொன்ற புலிகளை கொலை செய்ய திட்டமிட்ட சிவன்னா மற்றொரு பசுவுக்கு விஷம் கொடுத்து வனப்பகுதிக்குள் அனுப்ப புலிகள் அது வேட்டையாடி சாப்பிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.