திருமணம் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சித்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு ராஜா ராணி சீசன் 2 சீரியலில் சித்தூர் கதாநாயகனாக நடித்தார். ரஜினி என்ற சீரியலிலும் ஸ்ரேயா அஞ்சன் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமண வாழ்க்கை குறித்து ஸ்ரேயா பேசியுள்ளார். அதில், ஒரு நாள் நடந்த சம்பவத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது. நாங்கள் சூட்டிங்காக கொடைக்கானல் சென்று இருந்தோம்.

அங்கு எதிர்பாராத விதமாக எனக்கு பீரியட்ஸ் வந்து விட்டது. அப்போது நான் பேட் எதுவும் எடுத்துக் கொண்டு போகவில்லை. நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தால் கூட ஒரு மணி நேரம் டிராவல் செய்ய வேண்டும். அப்போது நான் என்ன செய்வது என்று தத்தளித்து கொண்டிருந்தபோது எனக்கு சித்து தான் பல உதவிகளை செய்தார். அதற்குப் பிறகுதான் எனக்கு அவர் மீது பெரிய நம்பிக்கை வந்தது. அவரை பிடிக்க தொடங்கியது என்று மனம் திறந்து ஸ்ரேயா பேசியுள்ளார்.