ஒவ்வொருவரும் வாழ்வில் சந்தோஷம், துக்கம், துரோகம், என எல்லாவற்றையும் பார்த்திருப்பார்கள். சில நேரம் அனைத்தையும் எதிர்த்து போராட வேண்டும் என தோன்றும். மற்றொரு நேரம் தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று தோன்றும். அப்படி இருக்கும்போது விபரீத முடிவுகளை எடுப்பவர்கள் ஒரு சில நேரம் காப்பாற்றப்படுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. உத்திர பிரதேசத்தில் ஒரு வாலிபர் வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்துள்ளார்.

அவருக்கு வேலை போய் விட்டதாக மெயில் வந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் 12-வது மாடியில் இருந்து கீழே குதிக்க முயன்றார். அவர் மாடியில் இருந்து குதிக்க முயன்றதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டு அவரை நிறுத்த முயன்றனர். இதற்கிடையே சில வாலிபர்கள் மாடியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபரை குண்டுகட்டாக தூக்கி விட்டனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.