
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சுசிலா (55). இவரது கணவர் அன்பழகன். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுசிலா, முதல்சேரியில் நடந்த புதுமனை புகுவிழாவிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவருடைய அக்கா மகனான மற்றொரு அன்பழகன் (30) வழிமறித்து, சுசிலாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்த நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த அன்பழகன், சுசிலாவின் இடுப்பு மற்றும் கழுத்து பகுதிகளில் கொடூரமாக குத்தி, தப்பிச் சென்றுள்ளார்.
இதில் கடுமையாக காயமடைந்த சுசிலா, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுசிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சொத்து தகராறு மற்றும் முன்விரோதமே இந்த கொலைக்குக் காரணம் என தெரியவந்துள்ளது. தாயை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரமாக செய்து வருகின்றனர்.