
வட அமெரிக்காவில் உள்ள சூடான் நாட்டில் பல்வேறு பகுதிகளில் தங்க சுரங்கங்கள் அமைந்துள்ளது. இந்த நிலையில் சூடானில் ஏற்பட்ட உள்நாட்டு போர் நீடித்துக் கொண்டே இருப்பதால் ராணுவத்தினருக்கும், துணை இராணுவத்தினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.
மற்றொரு பக்கம் பல்வேறு இடங்களில் உள்ள தங்க சுரங்கங்களில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினர் கட்டுப்பாட்டிலும், சட்ட விரோதமாகவும் தங்க சுரங்கங்களில் இருந்து தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது.
ரெட் சி மாகாணத்தின் உள்ள ஹவாத் என்ற பகுதியிலும் அமைந்துள்ள தங்க சுரங்கம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று அந்த தங்க சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளானதால் உள்ளே வேலை பார்த்துக் கொண்டிருந்த 16 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மீட்புத்துறையினர் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.