
தெலுங்கானா மாநிலம் நந்தியால் பகுதியில் உள்ள பரபரப்பான சாலையில் லாரி பைக் மீது மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், முதலில் லாரி நேராக செல்கிறது.
சிறிது நேரத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி சாலையில் மறுபுறம் பாய்ந்து எதிரே வந்த பைக் மீது மோதியது. அந்த பைக்கில் வந்தவர் சுதாரித்துக் கொண்டு வாகனத்தை நிறுத்த முயன்ற சமயத்தில் லாரி வேகமாக அவர் மீது மோதியதோடு சாலையோரம் சரிந்து நின்றது.
A tipper lorry driver under the influence of alcohol lost control of his vehicle, which jumps the divider and hits a two-wheeler coming from the opposite direction on the highway, and veered off the road in #Nandikotkur , #Nandyal dist, seriously injuring the two-wheeler riders,… pic.twitter.com/4YgIH4diYh
— Surya Reddy (@jsuryareddy) June 2, 2025
அந்த லாரியின் பின்புற டயரில் சிக்கி அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பொதுமக்களிடையே பெரிய கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. “ஒருவர் ஒரு சில நிமிட சந்தோஷத்துக்காக, மற்றொருவரின் வாழ்க்கையே அழிவடையக்கூடாது” என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மதுபானம் அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.